எந்த தமிழ் மாதங்களில் என்னென்ன பயிர்கள் சாகுபடி செய்யலாம் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா?
தமிழர்களிடையே பருவ காலத்தைப் பொருத்து விவசாய நிலங்களில் பயிரிடும் முறைகளும் உண்டு. வேளாண்மையை பொருத்தவரையில் பட்டம் என்பது காலநிலையைச் சார்ந்ததாகும். அதனால் குறிப்பிட்ட பட்டத்துக்கு ஏற்றவாறு பயிர் சாகுபடி செய்தல் இன்றியமையாததாகும்.
விவசாயிகள் ஆடிப்பட்டத்தில் அனைத்து தானியப் பயிர்களும் மற்றும் பெரும்பாலான காய்கறிப் பயிர்களும் சாகுபடி செய்வார்கள். தொடர்ந்து ஒரே பயிரை சாகுபடி செய்யாமல், மாற்றுப் பயிர்களை விளைவிக்கும்போது மாற்றுப் பயிர்களுக்கு முந்தைய பயிரின் கழிவுகள் எருவாகப் பயன்படுவதோடு முந்தைய பயிரில் தங்கி வாழ்ந்த நோய்க்கிருமிகள் அதிகம் புதுப்பயிரைத் தாக்குவது இல்லை. காய்கறிகள் மனிதர்களுக்கு சரிவிகித உணவு அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அவை சுறுசுறுப்பான வாழ்க்கைக்கு உதவும் உயிர் சத்துக்கள், தாது உப்புக்கள், நார் சத்துக்களை வழங்குவதுடன் சக்திக்கு தேவைப்படும் மாவுச் சத்துக்களையும் அதிகமான அளவில் வழங்குகிறது. எனவே மாதவாரியான உள்நாடு மற்றும் வெளிநாடு சந்தைத் தேவையினை கருத்தில் கொண்டும், அதிக லாபம் பெறும் நோக்கத்தில் மாதாந்திர காய்கறிகளின் விலை விவரத்தினை அறிந்தும் பயிரிட வேண்டும்.
இப்போது எந்த தமிழ் மாதங்களுக்கு எந்தெந்த பயிர்கள் உகந்தது என்பது பற்றி பார்ப்போம். வாருங்கள்!
ஜனவரி: (மார்கழி, தை)
பருவ காலம்:
முன்பனிக்காலம்
உகந்த பயிர்கள்:
கரும்பு, சுரைக்காய், மிளகாய், பாகற்காய், தக்காளி, பூசணி, முள்ளங்கி, கீரைகள், வெங்காயம், கொத்தவரை, கத்தரி, அவரை.
பிப்ரவரி: (தை,மாசி)
பருவ காலங்கள்:
முன்பனிக்காலம், பின்பனிக்காலம்
உகந்த பயிர்கள்:
வெண்டை, கத்தரி, தக்காளி, மிளகாய், பாகற்காய், சுரைக்காய், கொத்தவரை, பீர்க்கங்காய், கோவைக்காய், அவரை, சூரியகாந்தி, உளுந்து, கம்பு, நாட்டுச்சோளம், கரும்பு, பருத்தி, கீரைகள்.
மார்ச்: (மாசி, பங்குனி)
பருவ காலம்: பின்பனிக்காலம்
உகந்த பயிர்கள்: வெண்டை, பாகற்காய், தக்காளி, கோவை, கொத்தவரை, பீர்க்கங்காய், சூரியகாந்தி, உளுந்து, கம்பு, நாட்டுச்சோளம், பருத்தி, கத்தரி
ஏப்ரல்: (பங்குனி, சித்திரை)
பருவ காலங்கள்: பின்பனிக்காலம், இளவேனில்காலம்
உகந்த பயிர்கள்: செடி முருங்கை, கொத்தவரை, வெண்டை, பீர்க்கங்காய், புடலை, பாகற்காய், அவரை, எள், கம்பு, நாட்டுச்சோளம்
மே: (சித்திரை, வைகாசி)
பருவ காலம்: இளவேனில்காலம்
உகந்த பயிர்கள்: செடி முருங்கை, கத்தரி, தக்காளி, கொத்தவரை, வெங்காயம், அவரை, எள், நாட்டுச்சோளம்
ஜூன்: (வைகாசி, ஆனி)
பருவ காலங்கள்: இளவேனில்காலம், முதுவேனில்காலம்
உகந்த பயிர்கள்: கொத்தவரை, கத்தரி, தக்காளி, கோவை, பூசணி, கீரைகள், வெண்டை, தென்னை
ஜூலை: (ஆனி, ஆடி)
பருவ காலம்: முதுவேனில்காலம்
உகந்த பயிர்கள்: மிளகாய், பாகற்காய், சுரைக்காய், பூசணி, பீர்க்கங்காய், முள்ளங்கி, வெண்டை, கொத்தவரை, தக்காளி, புடலை, எள், சூரியகாந்தி, உளுந்து, தென்னை, தட்டப்பயறு, துவரை, மொச்சை, பாசிப்பயறு
ஆகஸ்ட்: (ஆடி, ஆவணி)
பருவ காலங்கள்: முதுவேனில்காலம், கார்காலம்
உகந்த பயிர்கள்: முள்ளங்கி, பீர்க்கங்காய், பாகற்காய், மிளகாய், வெண்டை, சுரைக்காய், அவரை, கத்தரி, மிளகாய், சூரியகாந்தி, பருத்தி, பாசிப்பயறு, துவரை, மொச்சை
செப்டம்பர்: (ஆவணி, புரட்டாசி)
பருவ காலம்: கார்காலம்
உகந்த பயிர்கள்: செடிமுருங்கை, கத்தரி, முள்ளங்கி, கீரை, பீர்க்கங்காய், பூசணி, புடலை, அவரை, மிளகாய், நெல், பருத்தி
அக்டோபர்: (புரட்டாசி, ஐப்பசி)
பருவ காலங்கள்: கார்காலம், குளிர்காலம்
உகந்த பயிர்கள்: செடிமுருங்கை, கத்தரி, முள்ளங்கி, வெங்காயம், கொத்தவரை, சுண்டல், நெல், பருத்தி
நவம்பர்: (ஐப்பசி, கார்த்திகை)
பருவ காலம்: குளிர்காலம்
உகந்த பயிர்கள்: முருங்கை செடி, கத்தரி, தக்காளி, முள்ளங்கி, பூசணி, மிளகாய், கொத்தவரை, சூரியகாந்தி, சுண்டல், நெல், நாட்டுச்சோளம், தென்னை, கரும்பு, வாழை, மரவள்ளி
டிசம்பர்: (கார்த்திகை, மார்கழி)
பருவ காலங்கள்: குளிர்காலம், முன்பனிக்காலம்
உகந்த பயிர்கள்: வாழை, கத்தரி, சுரைக்காய், தக்காளி, பூசணி, மிளகாய், சுண்டல், நெல், நாட்டுச்சோளம், தென்னை, மரவள்ளி, முள்ளங்கி ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.